நாகாலாந்து: நாகாலாந்து மாநிலம் மோன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.